Wednesday, February 17, 2010

படித்ததில் பிடித்தது

செய்யப் போவதையே சொல்லுங்கள். சொன்னபடியே நடந்து கொள்ளுங்கள். எல்லா மனிதர் களையும் நேசித்து சேவை செய்யுங்கள். ஆர்வத்தோடு சேவையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.

எதையும் அனுபவத்தின் வாயிலாக உணர்ந்தால் தான் பயனுடையதாகும். வெறும் புத்தக அறிவு மட்டும் போதாது. அது மேலோட்டமானதே. ஆழ்ந்த பயன் தரக்கூடிய அனுபவ அறிவு மனித வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

இயற்கை அன்னைக்கு மதிப்பு கொடுங்கள். சுற்றுப் புறச் சூழலைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமையாகும். இல்லாவிட்டால் அபாயம் நிறைந்த எதிர்காலத்தை உருவாக்க நாம் காரணமாகி விடுவோம்.'

தனித்து வாழாதீர்கள். ஒதுங்கிப் பழகாதீர்கள். மனம் விட்டுப்பழகக் கற்றுக் கொள்ளுங்கள். ஒற்றுமை உணர்வு உங்களைச் சுற்றி மலர விடுங்கள். 

கடமைகளில் கருத்தைச் செலுத்துங்கள். அதுவே நம் பொறுப்பு. அதற்குரிய பலனைத் தரவேண்டியது கடவுளின் பொறுப்பு.

- சாய் பாபா

--
அன்புடன்

ஜோசப் பி கே
------------------------------------------------------
எதை நான் தருவேன் இறைவா
உன் இதயத்தின் அன்பிற்கீடாக
------------------------------------------------------

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

No comments:

Post a Comment